2026 மே 04, திங்கட்கிழமை

பிரதி பொலிஸ் மா அதிபர் வைத்தியலங்கார இடமாற்றம்

Super User   / 2013 மார்ச் 10 , மு.ப. 04:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.நூர்தீன்

மட்டக்களப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக கடமையாற்றிய ரவி வைத்தியலங்கார இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மார்ச் முதலாம் திகதி முதல் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் திணைக்கள தலைமையகத்திற்கு இவர் இடமாற்றப்பட்டுள்ளார்.

இதனால் ஏற்பட்ட வெற்றிடத்திற்கு தமிழ் பேசும் வி.இந்திரன் மட்டக்கப்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் மார்ச் கடந்த 3ஆம் திகதி முதல் பிரதி பொலிஸ் மா அதிபராக கடமைகளை பொறுப்பேற்றுள்ளார்.

பிரதி பொலிஸ் மா அதிபர் ரவி வைத்தியலங்காரவின் மகன் அசேல கடந்த பெப்ரவரி 24ஆம் திகதி சுகாதார அமைச்சர் மைத்திரிபால சிறிசேனவின் மகன் உள்ளிட்ட குழுவினரால் பாசிக்குடா கடற்கரையில் வைத்து தாக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தின் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராக அஜந்த சமரகோனும் பொலிஸ் அத்தியட்சகராக மேமன் சில்வாவும் கடமையாற்றுகின்றனர். கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பூஜித ஜயசுந்தர கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • M.A.A.Rasheed Sunday, 10 March 2013 06:12 AM

    இதுதான் அரசியல் சட்டம்.

    Reply : 0       0

    IBNU ABOO. Sunday, 10 March 2013 09:10 AM

    தன் மகன் விசயத்தில் அவர் அமைச்சர் ஸ்ரீசேனவின் மகனுக்கு ஆதரவாக செயல்பட்டிருந்தால் இது நேர்ந்திருக்காது...

    Reply : 0       0

    Sinnathamby Sunday, 10 March 2013 02:42 PM

    இது அப்படி அல்ல முன்னர் வந்த இடமாற்றம்

    Reply : 0       0

    vallarasu Monday, 11 March 2013 06:38 AM

    ஐயா சட்டம் என் கையில்>>.இதுதான் எனது சிந்த்தனை.

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .