2026 மே 04, திங்கட்கிழமை

'ஹலாலை மட்டும் புசிப்போம்' தலைப்பில் மட்டக்களப்பில் துண்டுபிரசுரம் விநியோகம்

Menaka Mookandi   / 2013 மார்ச் 23 , மு.ப. 06:37 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஜவ்பர்கான்

'ஹலால் - ஹராம் என்பது முஸ்லிம் உலகிற்கு மாத்திரம் சொந்தமானதல்ல. முழு மனித குலத்திற்கும் உரித்தானது. நீங்கள் அவசியம் அறிந்துகொள்ள வேண்டியவை!' எனும் தலைப்பில் அகில இலங்கை ஜம்மியதுல் உலமாவினால் தொகுக்கப்பட்ட துண்டுப்பிரசுரமொன்று நேற்று வெள்ளிக்கிழமை மட்டக்களப்பு  பிரதேசத்தில் புனித ஜும்மாத் தொழுகையின் பின்னர் பள்ளிவாயில்களில் விநியோகிக்கப்பட்டது.

இஸ்லாம் மற்றும் கிறிஸ்தவ சமயங்களால் தடை செய்யப்பட்டும் விஞ்ஞானத்தால் நிரூபிக்கப்பட்டதுமான உடலுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியதான பன்றியிலிருந்து தயாரிக்கப்படும் அனைத்துப் பொருட்களையும் நாம் பாவிப்பதிலிருந்து தவிர்த்துக் கொள்வோம் எனவும் பன்றியிலிருந்து தயாரிக்கப்படும் உணவு வகைகளும் இப்பிரசுரத்தில் குறிப்பிடப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

  Comments - 0

  • Sulthan Monday, 25 March 2013 04:38 AM

    இது நல்ல விடயம். அதேவேளை ஹலாலான முறையில் சம்பாதிக்கும் முறைகளையும் சொல்லிக் கொடுங்கள். பொய் சொன்னால், ஏமாற்றினால் நரக வேதனை உண்டு என்பதை எம்மவர்களில் பெரும்பலானவர்கள் நம்புவதாக இல்லை போலும். நம்புவதாக இருந்தால் ஏமாற்றுவார்களா?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .