2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

கஞ்சா வைத்திருந்த இருவர் கைது

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 02 , மு.ப. 10:47 - 0     - {{hitsCtrl.values.hits}}

-க.ருத்திரன்

கஞ்சா வைத்திருந்ததாகக் கூறப்படும் இருவரை இன்று புதன்கிழமை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

மட்டக்களப்பு, கல்குடா பொலிஸ் பிரிவில் உள்ள பேத்தாழைப் பகுதியில்  ஒருவரையும் பிறைந்துரைச்சேனையில் ஒருவரையும் கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

சைக்கிளில் சென்றுகொண்டிருந்த ஒருவரை மறித்து கல்குடா பிரதான வீதியில் காவல் கடமையிலிருந்த பொலிஸார்  சோதனையிட்டனர். இதன்போது இவர்  கஞ்சா வைத்திருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்தச் சந்தேக நபரிடம்  மேற்கொண்ட விசாரணையின்போதே மற்றைய சந்தேக நபரைக் கைதுசெய்துள்ளதாகவும் பொலிஸார் கூறினர்.

சந்தேக நபர்கள் இருவரையும் வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .