2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

வீடு கையளிப்பு

Suganthini Ratnam   / 2013 ஒக்டோபர் 06 , மு.ப. 04:29 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ்.எம்.எம்.முர்ஷித்


 'சனச செவன' வீடமைப்புத் திட்டத்தின் கீழ் மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள கண்ணகிபுரம் கிராமத்தில் அமைக்கப்பட்ட வீடு நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை பயனாளியிடம் கையளிக்கப்பட்டது.

தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் வாழைச்சேனை பிரதேசத்திற்கான தொழில்நுட்ப உத்தியோகத்தர் எம்.ஏ.நஹாஸ் முகம்மட் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் அதிதிகளாக கோறளைப்பற்று பிரதேச செயலாளர் திருமதி ரீ.தினேஸ், மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் முகாமையாளர் கே.ஜெகநாதன், வாழைச்சேனை பிரதேச செயலக உதவித் திட்டப் பணிப்பாளர் எஸ்.பிரபாகரன், மட்டக்களப்பு மாவட்ட தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் உதவி முகாமையாளர் ஜி.நிர்மலராஜன் உள்ளிட்ட பலர்; கலந்து கொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X