2025 ஓகஸ்ட் 15, வெள்ளிக்கிழமை

நாய்களுக்கு தடுப்பூசி போடும் வேலைத்திட்டம்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 24 , மு.ப. 03:50 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன்


மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள நாய்களுக்கு விசர் நாய்க்கடி தடுப்பூசி போடும் வேலைத்திட்டம் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

இந்த வேலைத்திட்டத்தின் கீழ், கால்நடை உற்பத்தி சுகாதார திணைக்களத்தின் கீழுள்ள மட்டக்களப்பு அரச கால்நடை வைத்திய அலுவலகத்தினால் நடமாடும் சேவை மூலம் மட்டக்களப்பு நாவற்குடா பிரதேசத்தில் உள்ள நாய்களுக்கு விசர் நாய்க்கடி தடுப்பூசி போடும்; வேலைத்திட்டம் நேற்றுமுன்தினம் வெள்ளிக்கிழமை   மேற்கொள்ளப்பட்டது.

மட்டக்களப்பு அரச கால்நடை வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.ஹாதி தலைமையில்  நடைபெற்ற இந்த நடமாடும் சேவையில் மட்டக்களப்பு அரச கால்நடை வைத்திய அலுவலகத்தின் அதிகாரிகள் பலரும் கலந்து கொண்டனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .