2025 ஓகஸ்ட் 16, சனிக்கிழமை

பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித யாழிற்கு இடமாற்றம்

Super User   / 2013 நவம்பர் 24 , பி.ப. 02:20 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எம்.எஸ்.எம்.நூர்தீன், எஸ்.பாக்கியநாதன், ரீ.எல்.ஜௌபர் கான்


கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பூஜித ஜயசுந்தர யாழ்ப்பாணத்திற்கு இடமாற்றம் பெற்றுள்ளார்.

கடந்த இரண்டு வருடங்களாக கிழக்கு மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபராக பூஜித ஜயசுந்தர செயற்பட்டார். இந்த நிலையிலேயே அவர் யாழ்ப்பாணத்திற்கு; இடமாற்றம் பெற்றுள்ளார்.

இடமாற்றம் பெற்றுச்செல்லும் இவருக்கான விசேட அணிவகுப்பு மரியாதை மட்டக்களப்பு மாகாத்மா காந்தி பூங்கா சதுக்கத்தில் இன்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது.

இந்த அணிவகுப்பில் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் மேவன் சில்வா, உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.



  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .