2025 மே 01, வியாழக்கிழமை

பட்டதாரிப் பயிலுனர்களுக்கான செயலமர்வு

Kogilavani   / 2013 நவம்பர் 27 , மு.ப. 06:16 - 0     - {{hitsCtrl.values.hits}}


-தேவ அச்சுதன்


மட்டக்களப்பு மாவட்ட தேசிய உரச்செயலகத்தின் ஏற்பாட்டில் செவ்வாய்க்கிழமை (26) சத்துருக்கொண்டான் விவசாயப்பயிற்சி நிலையத்தில் விவசாய அமைச்சிற்குள் உள்வாங்கப்பட்ட பட்டதாரிப் பயிலுனர்களுக்கான செயலமர்வொன்று நடைபெற்றது.

இச்செயலமர்வினை தேசிய உரச்செயலக மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுன் ஏற்பாடு செய்திருந்தார்.

'இச்செயலமர்வில் சேதனப்பசளையின் முக்கியத்துவமும் பயன்பாடும்' எனும் தலைப்பிலான விரிவுரைகளை மாவட்ட விவசாயப் பணிப்பாளர் பி.உகநாதன் நடத்தினார்.

அதேபோன்று, உரச்சட்டமூலம் தொடர்பில் தேசிய உரச்செயலக மட்டக்களப்பு மாவட்ட உதவிப் பணிப்பாளர் கே.எல்.எம்.சிராஜுன், வினைத்திறன்மிக்க இரசாயனப் பாவனையும் சிபார்சும் மற்றும் பசளைப் பிரயோகமும் காலமும் தலைப்புகளில் விவசாயப் போதனாசிரியர் எஸ்.சல்மான் ஆகியோரும் விரிவுரைகளை நிகழ்த்தினர்.

இன்றைய செயலமர்வில் மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய அமைச்சிற்குள் உள்வாங்கப்பட்டு மாவட்டத்தில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ள பட்டதாரிப் பயிலுனர்கள் கலந்துகொண்டனர்.

'இச் செயலமர்வு அரசாங்கத்தால் வழங்கப்பட்டுவரும் மானிய உரம் விவசாயிகளுக்கு சீரான முறையில் விநியோகம் செய்யப்பட்டு வினைத்திறன்மிக்க பயன்பாட்டுடன் அதிக விளைச்சல் பெற்று விவசாயிகளின் பொருளாதார அபிவிருத்திக்கும் நாட்டின் தேசிய உற்பத்தியை அதிகரிப்பதற்குமான நோக்கில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது' என மாவட்ட விவசாயப் பணிப்பாளர் பி.உகநாதன் தெரிவித்தார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .