2025 மே 01, வியாழக்கிழமை

சட்டவிரோத வலைகளுக்கு பதிலாக புதிய முறையை கையாளும் மீனவர்கள்

Suganthini Ratnam   / 2013 நவம்பர் 27 , மு.ப. 11:08 - 0     - {{hitsCtrl.values.hits}}


-எஸ். பாக்கியநாதன்


மட்டக்களப்பு வாவியில் சட்டவிரோத வலைகளைப் பாவிப்பதற்குப் பதிலாக மீனவர்கள் புதிய முறையைக் பின்பற்றுவதாக மட்டக்களப்பு மாவட்ட கடற்றொழில் மற்றும் நீரியல்வளத்; திணைக்கள உதவிப் பணிப்பாளர் டொமிங்கோ ஜோர்ஜ் தெரிவித்தார்.

பரிசோதகர்களின் கவனத்தை திசை திருப்புவதற்காக இவ்வாறான செயற்பாடுகளில் மீனவர்கள்  ஈடுபடுவதாகவும் அவர் கூறினார்.
வழமையாக வாவியில் கட்டும் வலைகளுக்குரிய வர்ண மிதப்புக்கள் மீன்களைக் கவரும் வகையில் நீரின் மேல் மட்டத்தில் தெரியக்கூடியவாறு மிதக்க விடப்படுவது வழமையாகும். இவ்வாறு மிதக்க விடுவதற்குப் பதிலாக தற்போது பழுதடைந்த மட்டையுடன் கூடிய தேங்காய்கள், பல வடிவமைப்பைக் கொண்ட ரெஜிபோம்கள், வெற்றுப் போத்தல்கள் என்பவற்றை மீனவர்கள் நீரில் மிதக்க விடுகின்றனர்.

ஆற்றில் தொடர்ந்து மிதக்கும் இவ்வகையான பொருட்களை சந்தேகத்தில் பரிசோதகர்கள்   நேற்று செவ்வாய்க்கிழமை இரவு   சோதனையிட்டபோது உண்மை நிலவரம் தெரியவந்துள்ளதாகவும் அவர் கூறினார்.

எவ்வளவோ அறிவுரைகளைக்  கூறியும்  சட்ட நடவடிக்கை எடுத்தபோதிலும்,  இவ்வாறான சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபடுபவர்களைக் கட்டுப்படுத்த முடியாமல் உள்ளதாகவும் அவர் கூறினார்.

இந்த நிலையில், வாவியில் உள்ள 112 மீன் இனங்களில் 28 மீன் இனங்கள் இவ்வகையான செயற்பாடுகளினால் இதுவரையில் அழிந்து போயுள்ளதாகவும் அவர் கூறினார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .