Editorial / 2018 டிசெம்பர் 24 , பி.ப. 07:40 - 0 - {{hitsCtrl.values.hits}}
கு.புஷ்பராஜ்
லிந்துலை - எல்ஜின் வனப் பகுதியிலிருந்து, மெராயாவூடாக மேல் கொத்மலை நீர்த்தேக்கத்துக்கு நீர் ஏந்தும் ஏற்றில், இரசயானப் பதார்த்தங்கள் கலக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
இதனால், குறித்த ஆற்று நீர், கறுப்பு நிறமாகக் காணப்படுவதாகவும் நேற்று (23) மாலையிலிருந்து, மீன்கள் இறந்து மிதந்து வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மீன்கள் இறந்து கரையொதுங்கியதை அடுத்தே, ஆற்று நீரில் இரசாயனம் கலக்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது. இந்த ஆற்று நீரில், இரசாயனம் எவ்வாறு கலக்கப்பட்டதென்பது தொடர்பான விசாரணைகளை, லிந்துலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
4 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Apr 2026