Editorial / 2024 மே 07 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}

திருமணமான கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்து, கள்ளக் காதலனை வீட்டுக்கு அழைத்து வந்த பெண்ணை மஸ்கெலியா பொலிஸார் சந்தேகத்தின் பேரில் கைது செய்தனர்.
அந்த பெண்ணை ஹட்டன் மாவட்ட நீதவான் நீதிமன்றில் திங்கட்கிழமை (06) ஆஜர்படுத்திய போது, அவரை 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் எச்.எம்.பரீதீன் உத்தரவிட்டார்.
கெப்பிட்டிபொல பிரதேசத்தைச் சேர்ந்த நிர்மிதா சதாரி என்ற 26 வயதுடைய பெண்ணே இவ்வாறு கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
தூக்க மாத்திரைகளை உட்கொண்டதாகக் கூறப்படும் சந்தேகத்திற்கிடமான பெண்ணின் (32) வயதுடைய கணவர் சுகவீனம் காரணமாக ஏப்ரல் (13) மஸ்கெலியா பிராந்திய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா-கிளங்கன் ஆதார வைத்தியசாலைக்கு ஏப்ரல் (14) மாற்றப்பட்டுள்ளார்.
இந்த சந்தேக நபராக பெண்ணும் கள்ளக் காதலனும் மஸ்கெலியா பிரதேச வைத்தியசாலையில் சுகாதார உதவியாளர்களாக கடமையாற்றி வருகின்றனர்.
ஏப்ரல் 1ம் திகதி (13) ஷிப்ட் முடிந்து வீட்டுக்கு வந்த பெண், பால் தேநீரில் தூக்க மாத்திரையை போட்டு கணவனுக்கு கொடுத்துள்ளார். அதன்பின்னர் தனது கள்ளக் காதலனுக்கு தொலைபேசியில் அழைப்பு விடுத்து வீட்டுக்கு அழைத்துள்ளார்.
கணவன் வேலைக்குச் செல்வதற்கு கடந்த 14ஆம் திகதி, எழுந்திருக்காததால், சந்தேகமடைந்த பெண், தனது கணவருக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளதாகவும், மன உளைச்சலில் இருப்பதாகவும் மஸ்கெலியா வைத்தியசாலை ஊழியர்களிடம் தெரிவித்துள்ளார்.
பின்னர் வைத்தியசாலை ஊழியர்கள் உடனடியாக நோயுற்ற சந்தேக நபரின் கணவரை மஸ்கெலியா வைத்தியசாலைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை பெற்றுக்கொண்டிருக்கும் போது, அதே வைத்தியசாலையில் கடமையாற்றும் முறைகேடான கணவர் நோயாளியின் அருகில் வந்து வைத்தியர்கள் கொடுத்த மருந்தைத் தவிர வேறு ஏதேனும் மருந்தை உட்கொண்டீர்களா எனக் கேட்டுள்ளார். இது தொடர்பில் சந்தேகம் அடைந்த மஸ்கெலியா வைத்தியசாலை ஊழியர்கள் உடனடியாக நோயாளியை மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா-கிளங்கன் ஆரம்ப வைத்தியசாலைக்கு அனுப்பி வைத்தனர்.
டிக்கோயா-கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் 04 நாட்களாக வதிவிட சிகிச்சை பெற்று வந்த சந்தேகநபரின் கணவர் வீட்டுக்கு வந்துவிட்டார்.
இந்நிலையில், தனது மருமகள் பால் தேநீர் தயாரித்து தனது மகனுக்கு குடிக்க கொடுத்ததையடுத்து நோயுற்றார் என அந்த நபரின் தந்தை மஸ்கெலியா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். அதனையடுத்து மஸ்கெலியா பொலிஸார் இது தொடர்பான விரிவான விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வரும் மஸ்கெலியா பொலிஸார், டிக்கோயா-கிளங்கன் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த சேவையாளரின் இரத்த மாதிரிகளை பெற்று சட்ட வைத்தியர் ஊடாக மரண விசாரணை அதிகாரிக்கு அனுப்பி அறிக்கையை பெற்றுக்கொள்ளவுள்ளதாக தெரிவித்தனர்.
குற்றவியல் சட்டத்தின் 319வது பிரிவின் கீழ் குற்றம் செய்யும் நோக்கில் விஷம் அல்லது நச்சு திரவத்தை கொடுத்து காயம் ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ் சந்தேகத்திற்கிடமான பெண் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 hours ago
06 Nov 2025
06 Nov 2025