2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

காணாமல்போன நபர் சடலமாக மீட்பு

Kogilavani   / 2021 மார்ச் 30 , பி.ப. 12:23 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.கிருஸ்ணா

புளத்கொஹூப்பிட்டியவிலிருந்து இம்புல்பிட்டிய பகுதியிலுள்ள தனது மகனின் வீட்டுக்குச் சென்ற நிலையில் காணாமல்போன 77 வயது நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்று, நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.

புளத்கொஹூப்பிட்டியவைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான எம்.செபஸ்தியன் என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இவர் கடந்த 19ஆம் திகதி புளத்கொஹுபிட்டியவிலிருந்து இம்புல்பிட்டிய பகுதியிலுள்ள தனது மகனின் வீட்டுக்குச் சென்ற நிலையில் காணாமல் போயுள்ளார்.

இது தொடர்பில் அவரது உறவினர்கள் 20 ஆம் திகதி நாவலப்பிட்டி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்த நிலையில், அவரை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டு வந்தனர்.

இந்நிலையிலலேய, இம்புல்பிட்டிய பகுதியிலுள்ள அவரது மகனின் வீட்டிலிருந்துசுமார் இரண்டு கிலோமீற்றர் தூரத்தில் அவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

பிரேதப் பரிசோதனைக்காக நாவலப்பிட்டிய வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில், நாவலப்பிட்டிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

 

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X