Janu / 2024 மார்ச் 04 , மு.ப. 11:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
நோர்வூட் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் நபர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை (03) மாலையிலிருந்து காணாமல் போயிருந்த நிலையில் திங்கட்கிழமை (04) காலை சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
சின்னதரவளை தோட்டத்தை சேர்ந்த பாலசுந்தரம் ( ராஜமணி) என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
குறித்த நபர் காணாமல் போயிருந்த நிலையில், நோர்வூட் பொலிஸ் நிலையத்தில் உறவினர்களால் முறைப்பாடு செய்யப்பட்டதுடன், அதின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த தோட்டப்பகுதியில் அமைந்துள்ள நீர்த்தேக்கத்திற்கு அருகில் தன் உயிரை மாய்த்துக்கொண்ட நிலையில் மீட்கப்பட்டுள்ளார் .
மேலும் இச் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை நோர்வூட் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
செ . தி . பெருமாள்
4 hours ago
25 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
25 Apr 2026