Janu / 2025 செப்டெம்பர் 25 , மு.ப. 09:35 - 0 - {{hitsCtrl.values.hits}}
லிந்துலை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட வலஹா தோட்டத்தில் புதன்கிழமை (24) காணாமல் போன நபர் வியாழக்கிழமை (25) சடலமாக மீட்கப் பட்டுள்ளார்.
லிந்துலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வலஹா தோட்டத்தைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தந்தையான 70 வயதுடைய கிருஷ்ண சாமி என்பவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார் .
புதன்கிழமை (24) இரண்டு மணியளவில் காணாமல் போயுள்ள அவரை உறவினர்கள் மற்றும் தோட்ட பொதுமக்கள் இணைந்து தேடுதலில் ஈடுபட்ட போது தேயிலை தோட்டப் பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
மேலும் இது தொடர்பாக லிந்துலை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கெளசல்யா

6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
6 hours ago
6 hours ago
6 hours ago
7 hours ago