2026 ஜனவரி 22, வியாழக்கிழமை

கோவிலுக்குள் நூலகம்

Kogilavani   / 2021 மார்ச் 17 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்

அறநெறி வகுப்பு மாணவர்கள் பயனடையும் வகையில், மஸ்கெலியா பிரவுன்லோ ஸ்ரீ முத்துமாரியம்மன் கோவிலில், நூலகம் ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

மஸ்கெலியா பிரதேச சபை உறுப்பினர் ராஜ் அசோக்கவின் ஏற்பாட்டில், கோவில் நிர்வாக சபை, சமூக கலாசார அறநெறி குழு இணைந்து நூலகத்தை ஆரம்பித்து வைத்துள்ளன.

இந்நிகழ்வில், மஸ்கெலியா பிரதேசசபை உறுப்பினர் ராஜ் அசோக், கோவிலின் பிரதம குரு ஆனந்தசர்மா, கோவில் நிர்வாக சபை தலைவர் ஆனந், அறநெறி தலைவர் முத்துலிங்கம் அறநெறி ஆசிரியர்களான சத்தியா, உமா மற்றும் அறநெறி மாணவர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.

அறநெறிசார்ந்த நூல்கள் இந்நூலகத்தில் வைக்கப்பட்டுள்ளன.
கோவிலுக்கு வரும் மாணவர்கள் பயனடையும் வகையில், இந்நூல்கள் வைக்கப்பட்டுள்ளன. 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X