Editorial / 2024 செப்டெம்பர் 16 , பி.ப. 05:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.திவாகரன்
நானுஓயா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதியில், நானு ஓயா - வெண்டிகோனர் பகுதியில் திங்கட்கிழமை (16) பிற்பகல் சாரதியின் கட்டுப்பாட்டையிழந்து அதிசொகுசு காரொன்று வீதியோரத்தில் உள்ள கற்பாறையில் மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த விபத்தில் 34 வயதுடைய காரின் சாரதி படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக நுவரெலியா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் , நுவரெலியாவில் இயங்கும் தனியார் வைத்தியசாலையில் விசேட வைத்தியர் ஒருவருக்கு சொந்தமான அதிசொகுசு காரே இவ்வாறு விபத்துக்குள்ளானது என நானுஓயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொழும்பில் இருந்து நுவரெலியா நோக்கி சென்ற சொகுசு கார் சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து வீதியில் இழுத்துச் செல்லப்பட்டு கற்பாறையில் மோதி விபத்துக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது.
வேகமாக சென்ற காரின் வேகத்தை கட்டுப்படுத்த முடியாமல் அல்லது சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதால், விபத்து ஏற்பட்டிருக்கலாம் என விசாரணை நடத்தி வரும் நானுஓயா பொலிஸார் கூறியுள்ளனர்.
சம்பவம் தொடர்பில் நானுஓயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.




4 minute ago
12 minute ago
15 minute ago
17 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 minute ago
12 minute ago
15 minute ago
17 minute ago