Kogilavani / 2016 ஜூலை 05 , மு.ப. 11:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

மு.இராமச்சந்திரன்
டினிட்டி யூத்திரன் தேவாலய அனுசரணையில் முன்பள்ளி ஆசிரியர்களுக்கான பயிற்சி நெறியை பூர்த்திசெய்த 13 ஆசிரியைகளுக்கு பயிற்சி சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்வு ஞாயிற்றுக்கிழமை(3) நுவரெலியா ஏஓஜி தேவாலயத்தில் நடைபெற்றது.
தேவாலயத்தின் தலைமை போதகர் ரவீந்திரன் தலைமையில் நடைப்பெற்ற இந்நிகழ்வில், அதிதியாக இந்தியாவிலிருந்து வருகைத் தந்திருந்த போதகர் சுரேஸ் ஜோன்சன் மற்றும் அவரின் துணைவியார் ரேனுகா சுரேஸ், பயிற்றுவித்த ஆசிரியர் விஜயகுமாரி உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
இதன்போது பயிற்சியை நிறைவு செய்த ஆசிரியைகளான அலிண்டலின் புளோரன்ஸ், ஜென்சி பிரிஜட், ரஞ்சனி தேவி, செல்வகுமாரி, பேபி சுதா, லலிதா, பானுரேவதி, ஜெயதேவி, தர்ஷினி குமாரி, பிரியந்தினி, சுசந்திக்கா பிரியதர்ஷினி, ரஞ்சனி, தீர்க்கசுமங்கலி ஆகியோர் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.



9 hours ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
14 Apr 2026