Gavitha / 2021 மார்ச் 11 , பி.ப. 01:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஆ.ரமேஸ்
பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் முகாமுக்கு, நேற்று (10) மாலை 74 பேர் தனிமைப்படுத்துக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இவர்களில் 73 பெண்கள், 14 ஆண்கள் உள்ளங்குகின்றனர்.
வெளிநாடுகளுக்கு, தொழில் நிமிர்த்தம் சென்று நாடு திரும்பியவர்களே, இவ்வாறு தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
கட்டார், ஓமான், சவூதி, இந்தோனேசியா ஆகிய நாடுகளில் இருந்து, கடந்த இரண்டு தினங்களில் இலங்கைக்கு வந்தவர்கள் இதில் உள்ளடங்குகின்றனர்.
மேலும் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் கடந்த காலங்களில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டிருந்த, 171 பேர் அவர்களின் தனிமைப்படுத்தல் காலத்தை முடித்துக் கொண்ட நிலையில், பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னர், கடந்த சனிக்கிழமை சொந்த வீடுகளுக்குத் திரும்பியமை குறிப்பிடத்தக்கது.
2 hours ago
3 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
3 hours ago
3 hours ago