Janu / 2024 ஜூலை 14 , பி.ப. 03:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
கொத்மலை பிரதேசத்திற்கான ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டு அலுவலகம் திறப்பு விழா தவலந்தன்னை நகரில் ஞாயிற்றுக்கிழமை (14) காலை இடம்பெற்றது .
ஐக்கிய தேசிய கட்சியின் கொத்மலை பிரதேச தமிழ் அமைப்பாளராக அண்மையில் நியமனம் பெற்ற சண்முகம் திருச்செல்வம் தலைமையில் இந்த செயற்பாட்டு அலுவலகம் உத்தியோகபூர்வமாக மக்கள் பாவனைக்கு திறந்துவைக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் சப்ரகமுவ மாகாண ஆளுநர் நவீன் திஸாநாயக்காவின் செயலாளரும் கொத்மலை தேர்தல் தொகுதி அமைப்பாளருமான விஜயவர்தன தேவகெதர உள்ளிட்ட அரசியல் பிரமுகர்கள், பொது மக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
ஆ.ரமேஸ்



3 hours ago
21 Feb 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
21 Feb 2026