2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

தீக்காயங்களுக்குள்ளான மாணவன் பலி

Sudharshini   / 2016 மே 09 , மு.ப. 06:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ், கு.புஸ்பராஜ்

காமன் கூத்து நிகழ்வில்; ஏற்பட்ட திடீர் தீ விபத்தில் காயமடைந்த 17 வயது மாணவன் சிகிச்சை பலன் இன்றி நேற்று (08) உயிரிழந்துள்ளார்.

டயகம பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டயகம கிழக்கு தோட்டம் முதலாம் பிரிவில், கடந்த மார்ச் மாதம் 15ஆம் திகதி இடம்பெற்ற காமன் கூத்து நிகழ்வில் ஏற்பட்ட தீ விபத்தில் படுகாயமடைந்த இரண்டு மாணவர்கள், நுவரெலியா மாவட்ட வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்று வந்தனர்.

இந்நிலையிலே, சிகிச்சைப் பலனின்றி  54 நாட்களின் பின்னர் நேற்று (08) இம்மாணவன் உயிரிழந்துள்ளார் எனவும் மற்றொரு மாணவன் ஆபத்தான நிலையில் தொடர்ந்தும் சிகிச்சைப்பெற்று வருகின்றார் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .