Editorial / 2024 நவம்பர் 12 , பி.ப. 05:27 - 0 - {{hitsCtrl.values.hits}}

மஹிந்த குமார்
பலாங்கொடை, பின்னவல பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குருப்பனாவல இத பத்தெனிய பகுதியில் ஆண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
வயல் நிலத்தில் சடலமொன்றை கண்ட அப்பகுதி மக்கள் பின்னவல பொலிஸ் நிலையத்துக்கு அறிவித்துள்ளனர். ஒரு பிள்ளையின் தந்தையின்( வயது 38) சடலமே கைப்பற்றப்பட்டுள்ளது.
பாக்குப் பறிக்க சென்று மரத்தில் இருந்து தவறி விழுந்து இறந்திருப்பார் என்று சந்தேகிக்கும் பொலிஸார், விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
ஸ்தலத்துக்கு விரைந்த இரத்தினபுரி மாவட்ட குற்றபுலனாய்வு அதிகாரிகள், இடத்தை சோதித்தனர். அதன் பின்னர் பலாங்கொடை நீதிமன்ற நீதவான் விசாரணைகளை முன்னெடுத்தார்.
9 hours ago
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
9 hours ago
14 Apr 2026