Editorial / 2017 ஜூலை 10 , பி.ப. 01:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
மு.இராமச்சந்திரன்
“புண்ணாக்குக்கு நிர்ணய விலையை அரசாங்கம் தீர்மானிக்க வேண்டும்” என்று, பாற்பண்ணையாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர்கள்,
“புண்ணாக்கின் விலை, சடுதியாக அதிகரித்துள்ளமையால், கால்நடை வளர்ப்பு தொழிற்றுறையை முன்னெடுக்க முடியாதுள்ளது.
“பசு, மாடுகளுக்கு புல் மற்றும் புண்ணாக்கு போன்றவற்றையே உணவாக வழங்கி வருகின்றோம். தற்போது புண்ணாக்கின் விலை 2,500 ரூபாயிலிருந்து 3,200 ரூபாய்வரை உயர்ந்துள்ளது. இந் நிலையில், சடுதியான விலையேற்றத்தால் நாம் பெரும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளோம்.
“எனவே, அரசாங்கம், புண்ணாக்குக்கு, நிர்ணய விலையை குறிப்பிட வேண்டும்” என்று, அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
46 minute ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
3 hours ago