2026 ஜனவரி 21, புதன்கிழமை

பொலிஸ் அதிகாரிக்குக் கத்திக்குத்து; ஒருவர் கைது

Kogilavani   / 2021 ஏப்ரல் 12 , மு.ப. 11:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

நடராஜா மலர்வேந்தன்

பசறை நகரில் கடமையிலீடுப்பட்டிருந்த பொலிஸ் அதிகாரி ஒருவரை, கத்தியால் குத்திய நபரை, பசறைப் பொலிஸார் நேற்று (12) கைதுசெய்துள்ளனர்.

பசறை நகரிலுள்ள அங்காடியில் பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் நபரொருவர் செயற்பட்டுள்ள நிலையில், அந்நபரை எச்சரிப்பதற்காக பொலிஸ் அதிகாரி சென்றபோதே, குறித்த நபர் பொலிஸ் அதிகாரியை கத்தியால் குத்தியுள்ளார் என்று தெரியவருகிறது.

அருகிலிருந்தவர்களின் உதவியுடன் பொலிஸ் அதிகாரி பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சம்பவத்துடன் தொடர்புடைய நபரை கைதுசெய்துள்ள பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X