Janu / 2024 டிசெம்பர் 18 , மு.ப. 10:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஐஸ் மற்றும் ஹெரோயினுடன் சிவனொளிபாத மலை யாத்திரைக்கு வந்த இளைஞன் ஒருவன் ஹட்டன் ரயில் நிலையத்தில் வைத்து செவ்வாய்க்கிழமை (17) கைது செய்யப்பட்டுள்ளார்.
சந்தேகநபர், கேகாலை பிரதேசத்தை சேர்ந்த 26 வயதுடையவர் எனவும், அவர் கொழும்பு கோட்டையில் இருந்து பதுளை நோக்கி பயணித்த உடரட்ட மெனிக்கே ரயிலில், இன்னொரு குழுவுடன் வந்துள்ளதாகவும் ஹட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ரஞ்ஜித் ராஜபக்ஷ

14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026