2026 ஏப்ரல் 04, சனிக்கிழமை

பாடசாலை மீண்டும் திறக்கப்பட்டது

Niroshini   / 2016 மே 06 , மு.ப. 06:48 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கணேசன், மு.இராமசந்திரன்

ஒரு வகை தெள்ளூப்பூச்சி பரவியதன் காரணமாக நேற்று அட்டன் கல்வி வலயத்தில் மூடப்பட்டிருந்த என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலயம் இன்று மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.

தீடிரென ஒரு வகை தெள்ளூப்பூச்சிகள் குறித்த பாடசாலையின் கட்டடத்துக்குள் நுழைந்ததன் காரணமாக கல்வி நடவடிக்கைகள் தடைப்பட்டது.

இதனையடுத்து, பாடசாலை நிர்வாகம் முன்கூட்டியே மாணவர்களுக்கு விடுமுறை வழங்கியுள்ளது.

இப்பாடசாலையில் கல்வி பயிலும் மாணவர்களுடைய பெற்றோர்களின் உதவியை கொண்டு பாடசாலை நிர்வாகம் தெள்ளுப்பூச்சிகளை ஒழிப்பதற்காக மருந்து வகைகளை பிரயோகித்துள்ளனர்.

இதனை தொடர்ந்து நேற்று பாடசாலை மூடப்பட்டதுடன், இன்று வழமைபோல் பாடசாலை கல்வி நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக என்பீல்ட் தமிழ் மகா வித்தியாலய அதிபர் தெரிவித்தார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .