2026 ஜனவரி 20, செவ்வாய்க்கிழமை

மரே தோட்டத்தின் 7 பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

R.Maheshwary   / 2021 செப்டெம்பர் 27 , பி.ப. 05:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

எஸ்.கணேசன்

மஸ்கெலியா-  மரே தோட்டத்தின் 7 பிரிவுகளை சேர்ந்த தொழிலாளர்கள் இன்று தோட்ட தொழிற்சாலைக்கு முன்பாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சுமார் 100ற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி பதாதைகளை ஏந்திய வண்ணம், கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தை முன்னெடுத்திருந்தனர்.

மரே தோட்டத்தை சேர்ந்த போரஸ் பிரிவு, நல்லதண்ணி மேல்பிரிவு, கீழ்பிரிவு, வலதல பிரிவு, கெடஸ் பிரிவு, புதுக்காடு பிரிவு, ராஜ மலை பிரிவு ஆகிய பிரிவுகளை சேர்ந்தவர்களே இந்த போராட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர்.

1000 ரூபாய் சம்பள அதிகரிப்பை தருவதாக கூறிய கம்பனிகள், தற்போது தம்மை ஏமாற்றியுள்ளதாகவும், முன்னர் நாளொன்றுக்கு 16 கிலோ பச்சை தேயிலையை பறித்து வந்த நிலையல் இன்று அது 20 கிலோவரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக தொழிலாளர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.

தற்போது தேயிலை கொழுந்து விளைச்சல் இல்லாத நிலையில், தம்மால் 20 கிலோ பறிப்பது என்பது முடியாதுள்ளதோடு, தாம் தினசரி 7 தொடக்கம் 10 கிலோ தேயிலை கொழுந்தையே பறிக்கும் நிலையில் உள்ளோம்.

இவ்வாறான நிர்வாகங்களின் கெடுபிகளால் தாம் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்து வருவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

மேற்படி தோட்டங்களை பொறுப்பேற்றுள்ள நிர்வாகம் உரிய வகையில் செயற்படாததால் தோட்டங்கள் காடாகி வருகின்றன. சிறுத்தை உட்பட விலங்குகள் பெருகியுள்ளன. இதனால் பெரும் அச்சதுடனேயே பணி செய்ய வேண்டியுள்ளது. மேலும், பெருந்தோட்டத்துறை அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதேபோல தொழிலுக்கு செல்ல முடியாத நிலை காணப்படுகின்றது. உயிரை கையில் பிடித்துக்கொண்டே வேலைசெய்ய வேண்டிய அவலம் தொடர்கிறது.

தோட்ட நிர்வாகம் எந்தவித அடிப்படை வசதிகளையும் செய்துக்கொடுக்காமல் அடிமைகளைப் போல் நடத்துவதை ஏற்றுக் கொள்ள முடியாது என மரே தோட்ட மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்விடயம் தொடர்பாக தோட்ட முகாமையாளர் வினவியபோது, இந்த பிரச்சினை தற்போது காணப்படுவதை அவர் ஏற்றுக்கொண்டார்.

மேலும், இந்த பிரச்சினை தமது தோட்டத்திற்கு மட்டுமன்று முழு பெருந்தோட்டத்துறைக்கும் உரியதாகவு காணப்படுகின்றது. தற்போதைய அதி கூடிய மழை விளைச்சலை இல்லாது செய்துள்ளதோடு, அரசின் கொள்கைக்கமைய இரசாயண உர பாவனையும் நிறுத்தப்பட்டுள்ளதால் தமக்கு தேயிலைக்கு இரசாயண உரத்தை பயன்படுத்த முடியாத நாளும் விளைச்சலில் வீழச்சி ஏற்பட்டுள்ளது.

 

இந்த நிலை நிவர்த்திப்பதற்காக தமது கம்பனியின் உயர்மட்டம் சில வேலைத்திட்டங்களை தற்பொது முன்னெடுத்துள்ளதோடு, அதற்கான பலன்களை எதிர்காலத்தில் பெற்றுக்கொடுப்போம் என்றார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X