2025 மே 02, வெள்ளிக்கிழமை

மற்றொரு தொழிற்சாலைக்கும் சென்றது கொரோனா

Nirosh   / 2020 டிசெம்பர் 27 , பி.ப. 07:16 - 0     - {{hitsCtrl.values.hits}}

காவத்தை எல்லகேவத்த ஆடைத் தொழிற்சாலையில் பணிபுரியும் பெண்ணுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தொற்றாளருடன் தொடர்பிலிருந்த 30 பேர் தனிமைப்படுத்தப்பட்டு, ஆடைத் தொழிற்சாலையின் ஊழியர்கள் 130 பேருக்கு பிசிஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 

எதிர்வரும் புதன்கிழமை வரையில் ஆடைத்தொழிற்சாலை தற்காலிகமாக மூடப்பட்டுள்ளதோடு, பிசிஆர் பரிசோதனை முடிவுகள் வெளியானதன் பின்னர் அடுத்தக்கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமென காவத்தை சுகாதார வைத்திய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X