Editorial / 2025 டிசெம்பர் 18 , பி.ப. 05:34 - 0 - {{hitsCtrl.values.hits}}

செ.தி.பெருமாள்
மஸ்கெலியா பிரதேச சபையின் 2026 ஆண்டிற்கான வரவு-செலவுத் திட்டம் (பாதீடு) மூன்று மேலதிக வாக்குகளால், வியாழக்கிழமை (18) அன்று நிறைவேற்றப்பட்டது.
“பட்ஜெட் நிறைவேற்றப்பட்டமை, மக்களின் நம்பிக்கைக்கும், சபையின் பொறுப்புணர்ச்சிக்கும் கிடைத்த சான்றாகும். எதிர்வரும் காலப்பகுதியிலும் மஸ்கெலியா மக்களின் நலனுக்காக உறுதியுடன் செயல்படுவோம்” என தவிசாளர் கந்தையா இராஜ்குமார் தெரிவித்தார்.
வரவு –செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக ஐக்கிய மக்கள் சக்தி உறுப்பினர்கள் 06 பேர், ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்கள் இருவர், சுயேச்சை உறுப்பினர்கள் இருவர் என 10 பேர் ஆதரவாக வாக்களித்தனர்.
தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் ஏழு பேரும் பட்ஜெட்டுக்கு எதிராக வாக்களித்தனர்.
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
5 hours ago
5 hours ago
6 hours ago