2026 ஏப்ரல் 25, சனிக்கிழமை

மாணவன் கௌரவிப்பு

Editorial   / 2018 ஜூன் 15 , பி.ப. 01:45 - 0     - {{hitsCtrl.values.hits}}

சிவாணிஸ்ரீ

2017ஆம் ஆண்டு நடைபெற்ற கல்வி பொதுதர உயர்தர பரீட்சையில், உயிரியல் முறைமை தகவல் தொழில்நுட்பம் பாடத்தில், அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்ற இரத்தினபுரி சீவலி மத்திய வித்தியாலய மாணவன் லக்ஷித சதுரங்க மடலகம, சப்ரகமுவ மாகாண சபை சபையால், நேற்று முன்தினம்(13)  கௌரவிக்கப்பட்டார்.

மேற்படி அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தைப் பெற்ற மாணவன் லக்ஷித சதுரங்க மடலகமவுக்கு அவரின் எதிர்கால கல்வி நடவடிக்கைக்காக ஐம்பதாயிரம் ரூபாய் நிதி வழங்கப்பட்டது.

இந்நிகழ்வில், சப்ரகமுவ மாகாண ஆளுநர் நிலுக்கா ஏக்கநாயக்க, சப்ரகமுவ மாகாண ஆளுநரின் செயலாளர் ருக்மணி ஆரியரத்ன, மாகாணக் கல்வி அமைச்சின் செயலாளர் மஹிந்த எஸ்.வீரசூரிய ஆகியோர் கலந்துகொண்டனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .