Janu / 2025 செப்டெம்பர் 22 , பி.ப. 01:52 - 0 - {{hitsCtrl.values.hits}}
தலவாக்கலை நகரில் நிறுத்தப்பட்டிருந்த பேருந்தின் பின்புறத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்று மோதியதில் மூன்று பேர் காயமடைந்துள்ள சம்பவம் ஞாயிற்றுக்கிழமை (21) மாலை இடம்பெற்றுள்ளது.
மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் பலத்த காயங்களுக்குள்ளாகி மிகவும் ஆபத்தான நிலையில் நுவரெலியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
நுவரெலியா பகுதியிலிருந்து தலவாக்கலை நோக்கி அதிக வேகத்தில் வந்த மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தலவாக்கலை மக்கள் வங்கிக்கு அருகாமையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பேருந்தின் மீது மோதியுள்ளது.
மேலும் வீதியில் நடந்து சென்ற ஒருவரும் மோட்டார் சைக்கிளில் சென்ற இரண்டு பேரும் விபத்தில் காயமடைந்துள்ளதாக தெரிவித்த தலவாக்கலை பொலிஸார் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
பி.கேதீஸ்

58 minute ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
58 minute ago
1 hours ago
2 hours ago