Kogilavani / 2016 ஜூன் 17 , மு.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
இந்திக அருண் குமார
நாவுல, ஸ்ரீ நாத பாடசாலையில் தரம் 8,9ஆம் தரங்களில் கல்விப்பயின்று வரும் டீ.எம்.சசிந்த, ஏ.ஜி.எஸ்.எஸ்.அம்பகஸ் பிட்டிய ஆகிய இரு மாணவரையும் கடந்த 14ஆம் திகதியிலிருந்து காணவில்லை என நாவுல பொலிஸில் புதன்கிழமை(15) முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேற்படி மாணவர் இருவரும் நண்பர்களெனவும் எனினும் ஒரு மாணவனின் பெற்றோரே முறைப்பாடு செய்துள்ளதாகவும் மற்ற மாணவனின் பெற்றோர் இதுவரை முறைப்பாடு செய்யவில்லை எனவும் பொலிஸார் மேலும் கூறினார். முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். எனினும் மாணவர்கள் தொடர்பில் தகவல் தெறிந்தவர்கள், அருகிலுள்ள பொலிஸ் நிலையம் அல்லது 071-9973252 என்ற அலைபேசி இலக்கத்துடன் தொடர்புக்கொண்டு அறிவிக்குமாறும் பொலிஸார் கோரியுள்ளனர்.
1 hours ago
9 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
9 hours ago