R.Maheshwary / 2022 டிசெம்பர் 22 , பி.ப. 12:48 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஷேன் செனவிரத்ன
ரயிலில் மோதி உயிரிழந்த நபரின் ஒருவரின் சடலம் தண்டவாளத்தில் இருந்து அப்புறப்படுத்த தாமதமாகியதன் காரணமாக, மலையக ரயில் சேவைகள் இரண்டு மணித்தியாலங்கள் தாமதமாகின.
இன்று (22) காலை பிலிமத்தலாவை ரயில் நிலையத்துக்கு அருகிலேயே குறித்த சடலம் காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இன்று காலை 6.30 மணியளவில் இந்த நபர் ரயிலில் மோதி உயிரிழந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுவதுடன், காலை 9 மணிவரை இச்சடலம் ரயில் தண்டவாளத்திலிருந்து அப்புறப்படுத்தப்படவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
எனினும் பின்னர் இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் சம்பவ இடத்துக்கு வருகைத் தந்த பேராதனை பொலிஸார், சடலத்தை அங்கிருந்து அப்புறப்படுத்தியுள்ளனர்.
எனினும் இதுவரை சடலம் அடையாளம் காணப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
13 minute ago
2 hours ago
3 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
13 minute ago
2 hours ago
3 hours ago