Kogilavani / 2016 ஜூலை 06 , மு.ப. 09:11 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.செல்வராஜா
பதுளை, ரொக்கில் என்ற இடத்தில் அமைந்திருக்கும் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தில் தொழில் பயிற்சிகளுக்கான விண்ணப்பங்களை இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபை கோரியுள்ளது.
தகவல் தொழில்நுட்பம், அழகுக்கலை, கணினி தொழில்நுட்பம், கட்டுமானப்பணிகள், வேல்டிங், தச்சு, உணவக சேவகர், சமையல், ஹோட்டல் கலை போன்றவற்றுக்கான பயிற்சிகள் வழங்கப்படவுள்ளன.
பயிற்சிக் காலத்தில் மாதாந்தம் 2,000 ரூபாய் வரை உதவிக் கொடுப்பனவு வழங்கப்படவுள்ளதுடன் பயிற்சியின் நிறைவில் சான்றிதழ்களும் வழங்கப்படவுள்ளன.
இப்பயிற்சிகளை தொடர விரும்புவோர் விண்ணப்பங்களை எதிர்வரும் 15ஆம் திகதிக்குள் பதுளை மாவட்ட ரொக்கில் தொழிற்பயிற்சி நிலையத்துக்கு அனுப்புமாறு கோரப்பட்டுள்ளனர்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026