Sudharshini / 2016 ஜனவரி 04 , பி.ப. 12:06 - 0 - {{hitsCtrl.values.hits}}
கஹாவத்தை, பெல்மதுல்லை எரிபொருள் நிரப்பு நிலையத்துக்கு அருகாமையில், இன்று திங்கட்கிழமை (04) அதிகாலை 6.50க்கு இடம்பெற்ற வாகன விபத்துச் சம்பவமொன்றில் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.
அப்பகுதியில் பாதையைக் கடக்க முற்பட்ட பெண்ணொருவரே தனியார் ஆடைத் தொழிற்சாலையொன்றுக்குச் சொந்தமான பஸ் ஒன்றில் மோதி உயிரழந்துள்ளார்.
பெல்மதுல்லை பகுதியைச் சேர்ந்த என்.பீ.குணவதி (வயது 65) என்பவரே உயிரிழந்துள்ளார் என்று பொலிஸார் தெரிவித்தனர். விபத்துடன் தொடர்புடைய பஸ்ஸின் சாரதியை பொலிஸார் கைதுசெய்து விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026