Editorial / 2026 பெப்ரவரி 13 , பி.ப. 02:44 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ் சதீஸ்
ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வீடு ஒன்றில் சுமார் ஒன்பது லட்சம் ரூபாவுக்கும் அதிக பெறுமதியான தங்க நகையை கொள்ளையிட்டுச் சென்ற நபர் ஒருவர் ஹட்டன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
ஹட்டன் பொலிஸ் நிலைய பிரதம பொலிஸ் பரிசோதகர் சுகததாசவுக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து சுற்றி வளைத்த பொலிஸார் சந்தேக நபரை கைது செய்துள்ளனர்.
இதன் போது அவரால் களவாடப்பட்ட 9 லட்சத்து 62 ஆயிரத்து 500 ரூபாய் பெறுமதியான தங்க நகையும் மீட்கப்பட்டுள்ளது.
சந்தேக நபர் ஹட்டன் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட யுனிபீல்ட் தோட்டத்தைச் சேர்ந்த 36 வயதானவர் ஆவார்.
சந்தேக நபர் ஹட்டன் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். தங்க நகையை திருடிய குற்றத்தை ஒப்புக் கொண்டதையடுத்து ஒரு லட்சம் ரூபாய் சரீர பிணையில் செல்ல நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
27 minute ago
31 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
27 minute ago
31 minute ago