2025 ஜூலை 14, திங்கட்கிழமை

900 மில்லியன் ரூபாய் செலவில் 3 கிராம வீதிகள் புனரமைப்பு

Sudharshini   / 2015 டிசெம்பர் 06 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

ரஞ்சித் ராஜபக்ஷ, ஆ.ரமேஷ்

நுவரெலியா மாவட்டத்திலுள்ள 3 கிராம வீதிகள், 900 மில்லியன் ரூபாய் செலவில் புனரமைக்கப்படவுள்ள. இதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு, மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமுதாய அபிவிருத்தி அமைச்சர்  பழனி திகாம்பரம்; தலைமையில், இன்று (06) நடைபெற்றது.

இதன்போது, செனன் - தலவாக்கலை, நானு ஓயா- உடரகலை ஆகிய 3 வீதிகளுக்கான அடிக்கற்கள்; நாட்டப்பட்டன.

மலையகத்தில் 16 கிராம வீதிகளைப் புனரமைக்கும் வேலைத்திட்டத்துக்கமையவே இவ்வீதிகள் புனரமைப்பு செய்யப்படவுள்ளன. 

இந்நிகழ்வில், நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எம்;.திலகராஜ், மத்திய மாகாண சபை உறுப்பினர்களான ஆர்.இராஜாராம், சோ.ஸ்ரீதரன், சிங் பொன்னையா, மலையக மக்கள் முன்னணியின் செயலாளர் ஏ.லோறன்ஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபையின் முக்கிய அதிகாரிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .