2026 ஜனவரி 21, புதன்கிழமை

10 மாத குழந்தை உட்பட இருவருக்கு தொற்று

Kogilavani   / 2021 ஏப்ரல் 08 , பி.ப. 12:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஆ.ரமேஸ்

பத்தனை ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனா தனிமைப்படுத்தல் முகாமில், தாய் ஒருவருக்கும் அவரது பத்துமாத பெண் குழந்தைக்கும், நேற்று முன்தினம் மாலை கொரோனா வைரஸ் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

மேற்படி முகாமில், தனிமைப்படுத்தப்பட்டுள்ள 175 பேருக்கு மேற்கொள்ளப்பட்ட பிசிஆர் பரிசோதனையில், பெண்ணொருவருக்கும் அவரது குழந்தைக்கும் தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. 

மேற்படி இருவரும் சவூதி அரேபியாவிலிருந்து, இலங்கை திரும்பியவர்கள் என்று, பொதுசுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X