2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகவிற்கு மகத்தான வரவேற்பு

Super User   / 2010 நவம்பர் 27 , மு.ப. 07:01 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எஸ்.சுவர்ணஸ்ரீ)

கடந்த பொதுத்தேர்தலில் கண்டி மாவட்டத்தில் அதிகூடிய விருப்பு வாக்குகளைப்பெற்று தற்போதைய அமைச்சரவையில் விளையாட்டுத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள மகிந்தானந்த அளுத்கமவுக்கு நேற்று வெள்ளிக்கிழமை நாவலப்பிட்டி நகரில் உற்சாகமான வரவேற்பு வைபவமொன்று இடம்பெற்றது.

நாவலப்பிட்டி நகரசபைத்தலைவர் நிஸாந்த ரணசிங்ஹ, பஸ்பாகே கோரளை பிரதேச சபைத்தலைவர் ரோகணபண்டார ஆகியோரின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த வரவேற்பு நிகழ்வில் பெருந்திரளான மக்கள் கலந்து கொண்டனர்.

எதிர்வரும் வருடங்களில் சர்வதேச விளையாட்டுப் போட்டிகள் சில இலங்கையில் இடம்பெறவுள்ளதால் இந்த விளையாட்டுப்போட்டிகளை சிறப்பாக நடத்தி விளையாட்டுத்துறை அமைச்சின் நற்பெயரை சர்வதேச ரீதியில் உயர்த்துவேன் என்று அமைச்சர் மகிந்தானந்த அளுத்கமகே இங்கு தெரிவித்தார்.



 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X