2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

கண்டி அங்கும்புறை பகுதியில் சக்திவாய்ந்த குண்டு மீட்பு

Kogilavani   / 2010 டிசெம்பர் 11 , மு.ப. 11:32 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

 

(மொஹொமட் ஆஸிக்)

கண்டி அங்கும்புறை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட காட்டுப் பகுதியில் மறைத்து வைத்த நிலையில் இருந்த குண்டொன்றினை அங்கும்புறை பொலிஸார் இன்று மாலை கண்டெடுத்தள்ளனர்.

பிரதேசவாசியொருவர் வழங்கிய தகவலினையடுத்தே இக்குண்டு கைப்பற்றப்பட்டுள்ளது.

இக் குண்டை செயலிழக்க செய்வதற்காக குண்டு செயலிழக்கும் பிரிவிற்கு அறிவித்துள்ளதாக அங்கும்புரை பொலிஸார் தெரிவித்தனர்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .