2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

தந்தையை உலக்கையால் அடித்து கொன்ற மகன்;பதுளையில் சம்பவம்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 07 , பி.ப. 01:41 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

பதுளை, அட்டாம்பிட்டிய பகுதியில் மகன் தந்தையை உலக்கையால் அடித்து கொலை செய்துள்ள சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளதாக பண்டாரவளை பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

அட்டாம்பிட்டிய, முதலாம் பிரிவு கொலனி என்ற முகவரியை சேர்ந்த செல்லையா சுப்பையா (வயது 71) என்பவரே கொல்லப்பட்டவராவார்.

இவரது மகனுக்கும், இவருக்கும் இடையில் மதுபோதையில் ஏற்பட்ட வாய் தர்க்கம் கொலையில் முடிந்துள்ளதாக பொலிஸ் விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.  

சம்பவத்தை அடுத்து சந்தேகநபராக மகன் கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பண்டாரவளை பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 


  Comments - 0

  • tamilsalafi.edicypages.com Sunday, 09 January 2011 01:16 PM

    துயரமான நிகழ்ச்சி. மது போதையில் தந்தையை கொல்லுவான், நாளை தாயையே துஸ்பிரயோகம் செய்வான் ? இந்த மதுவை விற்க ஒரு லைசென்ஸ் , வரி, தீர்வை என்றெல்லாம்...உணவுக்கு அறுக்கப்படுபவைகளை நிறுத்த எத்தனையோ போராட்டம். பெற்ற தந்தையே கொலை செய்ய தூண்டும் மதுவுக்கு தீர்வை இல்லா ஸ்பெசல் விலை வெளிநாட்டில் இருந்து வந்தால்... உறவுகளை பிரிந்து வெளிநாடு சென்றவன் வீடு திரும்பும் போதே குற்றச் செயல்களை ஊக்குவிக்க சிறப்பு சலுகை... என்ன உலகமடா இது ??
    பண்டிகை என்றாலே சிறப்புப் பானம் மது என்பது மார்க்கமாகவே
    ஆகிவிட்டது. குட்!?

    Reply : 0       0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X