2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

நமுனுகுலயில் லொறி குடைசாய்ந்ததில் ஒருவர் உயிரிழப்பு; ஐந்து பேர் படுகாயம்

Menaka Mookandi   / 2011 ஜனவரி 07 , பி.ப. 01:51 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எப்.எம்.தாஹிர்)

பண்டாரவளை, நமுனுகுல, நாவல பிரதேசத்தில் லொறி ஒன்று சுமார் 70 அடி பள்ளத்தில் குடை சாய்ந்ததில் ஒருவர் உயிரிழந்தும், ஐவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக எல்ல பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

இந்த சம்பவம் இன்று பிற்பகல் நமுனுகுல நாவல தோட்ட பிரதேசத்தில் வீதியொன்றுக்கு அருகில் இடம்பெற்றுள்ளது. சம்பவத்தில் ஹப்புத்தளையை சேர்ந்த டீ.எம்.ஜயசேகர (வயது 53) என்ற களஞ்சிய பாதுகாவலர் ஒருவரே உயிரிழந்தவர் ஆவார்.

சம்பவத்தில் காயமடைந்த ஐவரும் பதுளை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். எல்ல பொலிஸார் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X