2025 ஓகஸ்ட் 17, ஞாயிற்றுக்கிழமை

ஜனாதிபதியின் பாதுகாப்பு உத்தியோகஸ்தர் எனக்கூறி மோசடி செய்த நபர் கைது

Super User   / 2011 ஜனவரி 07 , பி.ப. 08:19 - 0     - {{hitsCtrl.values.hits}}

 

(எம்.எம்.ரம்ஸின்)

ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவில் பணியாற்றுவதாக கூறிக்கொண்டு, ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் தொழில் வாய்ப்பு பெற்றுத் தருவதாக தெரிவித்து 150 இளைஞர் யுவதிகளிடம்  பண மோசடி செய்த ஒருவரை நேற்று வெள்ளிக்கிழமை நாவலப்பிட்டி பொலிஸார் கைது செய்தனர்.

இவர் மேற்படி இளைஞர் யுவதிகளிடம் சுமார் 60 இலட்சம் ரூபாவை மோசடி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.


இவரிடமிருந்து மூன்று அடையாள அட்டைகள், இராணுவ சீருடை, ஜனாதிபதி செயலகத்தின் போலி கடிதத் தலைப்பு, இறப்பர் முத்திரைகள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.

நாவலப்பிட்டி பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட இளைஞர் யுவதிகள் தொழில் வாய்ப்புக்காக பொலிஸ் சான்றிதழ் பெற்றுச் சென்றதைத் தொடர்ந்து சந்தேகம் கொண்ட பொலிஸார் விசாரணை நடத்தியதையடுத்தே இந்நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி உதய விக்கிரம தலைமையில் விசாரணைகள் நடைபெறுகின்றன.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X