Freelancer / 2022 ஜூலை 30 , மு.ப. 07:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
படுகொலை செய்யப்பட்ட தமிழர் விடுதலைகூட்டணியின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான கலாநிதி நீலன் திருச்செல்வனின் நினைவுதினம் நேற்று (29) பிற்பகல் மூளாய் சுழிபுரத்தில் அமைந்துள்ள அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையில் இடம்பெற்றது
இதன் பொழுது கலாநிதி நீலன் திருச்செல்வத்தின் திருவுருவபடத்திற்கு மலரஞ்சலி செலுத்தப்பட்டதோடு ஈகை சுடரேற்றி அகவணக்கம் செலுத்தப்பட்டது.
இந்த நினைவேந்தலின் பொழுது பாராளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன், மாகாணசபை முன்னாள் உறுப்பினர் கஜதீபன்,பிரத்தியேக செயலாளர் கௌதமன், அமிர்தலிங்கம் நினைவு அறக்கட்டளையின் உறுப்பினர்கள் தங்கமுகுந்தன்,கௌரிகாந்தன் என பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. (a)
14 Apr 2026
14 Apr 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
14 Apr 2026
14 Apr 2026