2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

நீர்கொழும்பு இந்து மன்ற 80ஆவது நிறைவு தின நிகழ்வு

Gavitha   / 2014 ஜூலை 23 , மு.ப. 05:59 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் 80 ஆவது ஆண்டு நிறைவையிட்டு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 27ஆம் திகதி, நினைவு முத்திரை மற்றும் விஷேட ஞாபகார்த்த உறை வெளியீடு என்பவற்றுடன் மன்றத்தின் அமுத விழா நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.

நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் தலைவர் பொ.ஜெயராமன் தலைமையில் இந்நிகழ்வுகள் ஆரம்பிக்கப்பட்வுள்ளன.

இந்நிகழ்வில், தபால் சேவைகள்  அமைச்சர் ஜீவன் குமாரணதுங்க பிரதம விருந்தினராகவும், தபால் சேவைகள் பிரதி அமைச்சர் சனத் ஜயசூரிய ,தபால் சேவைகள் அமைச்சின் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, தபால்மா அதிபர் டி.எல்.ஆர்.அபேரட்;ன ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாகவும் கலந்து கொள்ளவுள்ளனர்.

இந்நிகழ்வில் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு நீர்கொழும்பு இந்து இளைஞர் மன்றத்தின் பொதுச் செயலாளர் சு. நவரெட்ன ராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .