2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

திருச் சிலுவைப் பால சட்டவேலிகளை திருத்துமாறு கோரிக்கை

Kanagaraj   / 2013 நவம்பர் 17 , மு.ப. 06:08 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.இஸட்.ஷாஜஹான்


நீர்கொழும்பு, முன்னக்கரை சிறிவர்தனபுர பிரதேசத்தில் அமைந்துள்ள திருச் சிலுவைப் பாலத்தின் (சிறி குருஸ் பாலம் )இரு பக்கமாகவும் இரும்பினால்  அமைக்கப்பட்டுள்ள சட்ட வேலி உடைந்து பல வருடங்களாகியும் அவை புனரமைப்பு செய்யப்படாமை தொடர்பாக பிரதேச மக்கள் விசனம் தெரிவிப்பதுடன் அவற்றை திருத்துமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

45 வருடங்களுக்கு முன்னால் அமைக்கப்பட்ட இப்பாலத்தின் உடைந்துள்ள பகுதியின் ஊடாக சிறுவர்கள் விழுந்துள்ளதாகவும், பாலத்தின் அருகில் உள்ள திறந்த வெளிப்பகுதியினூடாக முச்சக்கர வண்டி ஒன்று களப்பில் விழுந்துள்ளதாகவும் பிரதேசவாசிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

தினமும் பல நூற்றக்கணக்கான வாகனங்களும் பல ஆயிரக்கணக்கான பொது மக்களும் இப்பாலத்தினூடாகப் பயணிப்பதாகவும், பாலத்தின் அவல நிலை வாகனங்களுக்கும் பயணிக்கும் பொது மக்களுக்கும் அபாய நிலையை ஏற்படுத்தியுள்ளதாகவும்  அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

பலத்தை விரைவில் புனரமைத்துத் தர அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அவர்களது கோரிக்கையாகும்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .