2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

பாடசாலை மாணவியை துஸ்பிரயோகம் செய்த ஆசிரியருக்கு விளக்கமறியல்

A.P.Mathan   / 2013 டிசெம்பர் 06 , பி.ப. 02:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்
 
15 வயது பாடசாலை மாணவியை பாலியல் துஸ்பிரயோகம் செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்ட தனியார் வகுப்பு ஆசிரியர் ஒருவரை நீர்கொழும்பு பிரதான நீதவான் ஏ.என்.எம்.பி. அமரசிங்க எதிர்வரும் 20ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு இன்று வெள்ளிக்கிழமை (6) உத்தரவிட்டார்.
 
நீர்கொழும்பு நகரத்தில் பிரதான வீதியில் அமைந்துள்ள பிரபல தனியார் வகுப்பு (டியூட்டரி) நிலையம் ஒன்றின் விஞ்ஞானம் கற்பிக்கும் ஆசிரியர் ஒருவரே மேற்பட் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டவராவார்.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .