2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

விபத்தில் வெளிநாட்டவர் காயம்

Suganthini Ratnam   / 2014 பெப்ரவரி 11 , மு.ப. 03:30 - 0     - {{hitsCtrl.values.hits}}



-எம்.இஸட்.ஷாஜஹான்


நீர்கொழும்பு, கட்டுவ பிரதேசத்தில்  இன்று செவ்வாய்க்கிழமை காலை 05  வாகனங்கள் ஒன்றோடொன்று மோதி விபத்திற்குள்ளானதில் வெளிநாட்டுப் பிரஜை ஒருவருக்கு சிறிய காயம் ஏற்பட்டுள்ளதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்தனர்.

நீர்கொழும்பிலிருந்து கொச்சிக்கடைக்குச் சென்றுகொண்டிருந்த  தனியார் பஸ் வண்டியொன்று, லொறியொன்று  ஜீப்பொன்று மற்றும் 02 வான்கள் ஒன்றுடனொன்று மோதியதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தால் குறித்த பகுதியில்  வாகன நெரிசல் ஏற்பட்ட நிலையில்,   சம்பவ இடத்துக்கு வந்த நீர்கொழும்பு பொலிஸார் இதனைச் சீர்செய்தனர்.

விபத்து தொடர்பான விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .