2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

கோழிக் கூடுகளை அல்ல மக்கள் வாழ வீடுகள் வேண்டும்:ராம்.

Kanagaraj   / 2014 பெப்ரவரி 21 , மு.ப. 11:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

கொழும்பு மாநகரில் வீடுகள் இடிக்கப்பட்டு வெளியேற்றப்படும் மக்களுக்கு 'கோழிக்கூடுகளை' போன்ற வீடுகளை வழங்காது அம் மக்கள் தமது உறவுகளுடன்வாழக்கூடிய வீடுகளை வழங்க வேண்டுமென வழியுறுத்தும் மேல்மாகான சபை முன்னாள் உறுப்பினரும் ஜக்கிய தேசிய கட்சியின் கொழும்பு மாவட்ட பிரதானஅமைப்பாளரும்இ மேல்மாகான சபை தேர்தலின் முதன்மை தமிழ் வேட்பாளருமானசீ.வை.பி.ராம் தெரிவித்தார்.

மக்களை மனிதாபிமானத்துடன் அரசாங்கம் நோக்க வேண்டும். அதற்காகவே மக்கள் ஆட்சியாளர்களை தெதிவு செய்கின்றார்களென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

புளுமென்டால் வீதியிலுள்ள அலுவலகத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில்உரையாற்றும் போதே வேட்பாளர் ராம் இவ்வாறு தெரிவித்தார்.

இங்கு அவர் தொடர்ந்து உரையாற்றுகையில், பல வருடங்களாக கொழும்பில் வாழும் மக்கள் இன்று வீடுகள் இடிக்கப்பட்டு வெளியேற்றப்படுகின்றனர். விசேடமாக தமிழ்,முஸ்லிம் மக்கள் செறிந்து வாழும் கொம்பனித்தெரு,கிருலப்பனை,நாரஹேன்பிட்டி பிரதேசங்களில் வீடுகள் இடிக்கப்படவுள்ளன இடிக்கப்பட்டுள்ளன.

அபிவிருத்தி என்ற பெயரில் சொந்தமாக உறுதியுள்ள வீடுகளும் சட்ட விரோத கட்டிடம்என்ற முத்திரை குத்தப்பட்டு மக்கள் வெளியேற்றப்படுகின்றனர். வடகொழும்பில் வீடுகளைஇடிப்பதற்கு அடையாளப்படுத்தப்பட்டுள்ளன.அடிப்படை வசதிகள் இல்லாமல் வாழும்
மக்களுக்கு தொடர்மாடி வீடுகளை வழங்குவதை வரவேற்கின்றோம்.

அதேவேளை கஷ்டப்பட்டு உழைத்து வெளிநாடுகளக்கு சென்று உழைத்து 'எறும்பை'
போன்று சேமித்து தமக்கென்று தமது பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் என 10-11 பேர் வாழ்வதற்காக விசாலமான வீடுகளை நிர்மானித்து சொந்த உறுதிகள் கொண்டவர்களின் வீடுகளும் இடிக்கப்படுகின்றன.

ஆனால் அதற்கு பதிலாக கோழிக்கூடுகளைப் போன்று சிறிய வீடுகள் வழங்கப்படுகின்றனர்.இது எவ்வாறு நியாயமாகும் இது அம் மக்களுக்கு இழைக்கப்படும் அநீதியாகும்.இதனை நாம் எதிர்க்கின்றோம்.

அவ்வாறான வீடுகளுக்கு பதிலாக அம் மக்கள் வாழக்கூடிய வசதியுடன் வீடுகளை வழங்கவேண்டும். மக்களை பாதுகாக்கவே ஆட்சியாளர்களை மக்கள் தெரிவு செய்கின்றனர்.எனவேஅந்த பொறுப்பை ஆட்சியாளர்கள் நிறைவேற்ற வேண்டும்.

'சேரிகளை'இல்லாத கொழும்பு நகரம் என்ற அரசின் திட்டத்தைவரவேக்கின்றோம், ஆனால் 'சட்டியிலிருந்து நெருப்பில் விழுந்தது' போன்று கோழிகளைபோன்று கூனிக்குறுகி வாழும் வீடுகளை அமைத்தக் கொடுப்பதனால் எந்த விதமான மாற்றங்களும்ஏற்பட போவதில்லை. இதனால் புதியதொரு சமூகத்தை ஏற்படுத்த முடியாது. மறுபுறம் அபிவிருத்தி என்ற பெயரில் தமிழர்கள் செறிந்து வாழும் பிரதேசங்களில் வீடுகளை இடித்து வெளியேற்றுவதென்பதுஇனங்களிடையே நம்பிக்கை இல்லாத நிலைமையை நாட்டுக்குள் தோற்றுவிக்கும் என்றார்.






















You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .