2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

டக்ளஸ் தேவானந்தா கரங்களைப் பலப்படுத்துவது எமது கடமை - அஸ்வர் எம்.பி

Super User   / 2014 மார்ச் 22 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}


பாரம்பரிய கைத்தொழில்கள் மற்றும் சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சின் கீழ் கித்துள் தேசிய வேலைத்திட்டத்தின் கீழ் எதிர்வரும் மாதம் 4, 5, 6ம் திகதிகளில் கொழும்பில் நடைபெறவுள்ள கித்துள் கண்காட்சி மற்றும் விற்பனைச் சந்தை தொடர்பிலான ஊடகவியலாளர் மாநாடு வெள்ளிக்கிழமை (21) அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் கொழும்பு, நாரஹென்பிட்டியில் அமைந்துள்ள தகவல் திணைக்களக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

இதன்போது கருத்து தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் அல்ஹாஜ் ஏ.எச்.எம். அஸ்வர்.

எமது நாட்டின் தேசிய அபிவிருத்திக்கு பாரிய பங்களிப்பை வழங்கிவரும் மிகவும் சிறந்ததொரு அமைச்சை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவிடம் ஒப்படைத்துள்ளார்.

தேசிய ரீதியில் சமூகங்களை இணைத்து தேசிய உற்பத்தியை மேம்படுத்துவதற்கு அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா இந்த அமைச்சின் ஊடாக பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

வட மாகாணம் உட்பட நாடாளவிய ரீதியான அபிவிருத்தியில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா  அளப்பரிய பணிகளைச் செய்து வருகிறார்.

இந்நிகழ்வில் அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி, மேலதிகச் செயலாளர் அசந்த டி சில்வா வேலைத்திட்டங்கள் தொடர்பில் தெளிவுபடுத்தினர்.

தேசிய கித்துள் கண்காட்சி மற்றும் விற்பனைச்சந்தை எதிர்வரும் மாதம் 4, 5, 6ம் திகதிகளில் கொழும்பு, பௌத்தாலோக்க மாவத்தையிலுள்ள சுதர்ஷி வளாகத்தில் நடைபெறுகின்றது.

இதே போன்ற  கண்காட்சிகளும் விற்பனைச் சந்தைகளும் நாடாளாவிய ரீதியில் ஏற்பாடு செய்யப்படுமென அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.

அத்துடன் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின்  ஆலோசனைக்கு அமைவாக எதிர்வரும் ஏப்ரல் மாதத்தின் முதல் வாரத்தை கித்துள் மேம்பாட்டு மற்றும் பாவனை வாரமாக அமைச்சரவை அங்கிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.



You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .