2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

மானியம் வழங்காவிட்டால் மாபெரும் போராட்ட நடத்துவதாக எச்சரிக்கை

Kogilavani   / 2014 ஜூன் 06 , மு.ப. 06:00 - 0     - {{hitsCtrl.values.hits}}


எம்.இசெட்.ஷாஜஹான்


'கடந்த 12 மாத காலமாக வழங்கப்படாதுள்ள சிறு மீன்பிடித்துறை மீனவர்களுக்கான  மண்ணெண்ணெய் மானியத்தை வழங்காவிட்டால்  எதிர்வரும் 16 ஆம் திகதி நீர்கொழும்பில் மாபெரும் ஆர்ப்பாட்டம் ஒன்றை நடத்த ஏற்பாடு செய்துள்ளோம்' என நீர்கொழும்பு மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள்  எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

நீர்கொழும்பு – குடாப்பாடு ஐக்கிய மீனவர் சங்க காரியாலயத்தில் வியாழக்கிழமை மாலை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே மீனவர் சங்கங்களின் பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர்.

நீர்கொழும்பு கடற்கரைத் தெரு, வென்னப்புவ, பலகத்துறை, போருதொட்ட. பிட்டிபனை உட்பட பல்வேறு பிரதேசங்களையும் சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகள் இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்து தெரிவித்தனர்.

இங்கு கருத்து தெரிவித்த பிட்டிப்பனை மீனவர் பிரதிநிதி லெனின் பிரான்ஸிஸ்

'அரசாங்கம் மீனவர்களை தொடர்ந்து ஏமாற்றி வருகிறது. மண்ணெண்ணெய் மானியத்தை வழங்குவதாகக் கூறி கடந்த 12 மாத காலமாக எங்களை ஏமாற்றியுள்ளனர்.

ஜனாதிபதி வாக்குறுதி அளித்தபடி  மாதத்திற்கு 9375 ரூபா மானியம் கடந்த 12 மாத காலமாக வழங்கப்படாமல் உள்ளது.
அந்த வகையில் மீனவர் ஒருவருக்கு ஒரு இலட்சத்து 12ஆயிரத்து 500 ரூபா அரசாங்கத்தால் வழங்கப்பட வேண்டியுள்ளது.

நாங்கள் எதிர்ப்பு நடவடிக்கை மேற்கொள்ளும் ஒவ்வொரு தடைவையும் மீன்படித்துறை அமைச்சரும் அவரது பிரதி அமைச்சரும் பொய் வாக்குறுதிகளை மீனவர்களுக்கு வழங்குகின்றனர்.

தற்போது மண்ணெண்ணெய் மானியத்திற்கு பதிலாக மாற்றீடாக மீன்பிடி உபகரணங்களை மீனவர்களுக்கு பலாத்காரமாக வழங்க முயற்சிக்கின்றனர். அதற்கான படிவத்தை  தற்போது வழங்கியுள்ளனர். நாங்கள் கேட்பது மண்ணெண்ணெய் மானியத்தை மாத்திரமே.  அதற்கு மாற்றத் தீர்வை அல்ல.

நாங்கள் ஏலவே நடத்திய போராட்டத்தில்; உயிர்பலி எடுக்கப்பட்டதன் பின்னரே மானியம் வழங்குவதாக வாக்குறுதி அளிக்கப்பட்டது.

எனவே, விரைவில் மானியம் வழங்க நடவடிக்கை எடுக்காவிட்டால் எதிர்வரும்  16 ஆம் திகதி  (16) நீர்கொழும்பில் மாபெரும் ஆரப்பாட்டம் நடத்தப்படும். இதனால் ஏற்படும் விளைவுகளுக்கு அரசாங்கமே பொறுப்பு கூறவேண்டும் என்றார்.




You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .