2025 ஜூன் 22, ஞாயிற்றுக்கிழமை

எலிக் காய்ச்சல்: நீர்கொழும்பில் ஒருவர் மரணம்

Kanagaraj   / 2014 செப்டெம்பர் 04 , பி.ப. 01:13 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.இஸட். ஷாஜஹான்

எலிக் காய்ச்சலால் பாதிக்கப்பட்டு  நீர்கொழும்பு  மாவட்ட வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டிருந்த நீர்கொழும்பு, சாந்த ஜோசப் வீதியைச் சேர்ந்த  கொட்டிகாபெததே கெதர பியதாச என்ற 63 வயதான நபர் மரணமடைந்துள்ளார்.

லொறிச் சாரதியான  இவர், காய்ச்சலால் பாதிக்கப்பட்டு நேற்று புதன்கிழமை, நீர்கொழும்பு  மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் சிகிச்சைப் பலனின்றி மரணமாகியுள்ளார்.

இதேவேளை, இன்று வியாழக்கிழமை நீர்கொழும்பு மாவட்ட வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி விசேட வைத்திய நிபுணர் எம்.என். ரூஹுல் ஹக் பிரேத பரிசோதனை செய்து  எலிக்காய்ச்சலால் ஏற்பட்ட மரணம் இதுவென பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

மரணமடைந்த நபர் லொறிச் சாரதி என்பதால் பல்வேறு இடங்களுக்கு பயணம் செல்கையில் செருப்பு அணியாத நிலையில் எலிகளின் மலசல கழிவுகள் மூலம் அவருக்கு  எலிக் காய்ச்சல் ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனையின் மூலம் தெரிய வந்துள்ளது.

You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .